!!!:-)
Menu!!!!  
  Home
  Las Vegas
  Tamil Poems
  German&English Poems
  Coûntér
Tamil Poems

Hier findet ihr Tamil Poems                           விதி♥


♥ தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்... ♥

 

-1-
ஊடுருவல்கள்
தீவிரவாதத்தைச் சார்ந்தது எனில்
நீயும் நானும் தீவிரவாதிதான்
ஒருவரையொருவர் அறியாமல்
ஒருவருக்குள் ஒருவர்
ஊடுருவியுள்ளோம்.

-2-
கவிதை
இலக்கியம்
சிற்பம்
ஓவியம்
சங்கீதம்
இனிய கீதம்
இவையனைத்திற்கும் எனக்கான
ஊடகம் நீதான்

-3-
உன்
இனிமையான புன்னகையில்
இருக்குதடி இவ்வுலகின்
அத்தனை இன்பங்களும்!

-4-
நிறக்குருடு போல்
என் கண்களுக்கும்
ஒருவித குருடெனும்
குறைபாடு உண்டு
அது என்னவோ தெரியவில்லை
இவ்வுலகில் எனக்கு
நீ மட்டுமே
அழகாய் தெரிகிறாய்.

-5-
ஏற்பிற்கும் மறுப்பிற்குமான
இடைவெளி மிகக் குறைவு
மறுப்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளி மிகக்குறைவு
ஏற்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளி மிக அதிகம்
காதலியே
எனக்கான இடைவெளி
உன் கடைவிழியில்......

-6-
பத்திரமாய் பார்த்துக் கொள்
என் மனசை
அது உயிர்த்திருக்க வேண்டும்
பல நூற்றாண்டு
அதுவும்
உனக்குள் மட்டும்

-7-
நீ கிடைப்பாய்
என்ற நம்பிக்கையில்
கடத்தி கொண்டிருக்கிறேன்
சந்தோஷங்களை
நீ மறுப்பாயோ
என்ற சந்தேகத்தில்
மனம் திறக்காமல்
காத்திருக்கிறேன்
மறுப்பானாலும் சரி
ஏற்பானாலும் சரி
ஏற்கனவே
எழுதி வைக்கப்பட்டுவிட்டது
என் இதயம் கோவிலில்
தெய்வம் நீதானென்று


-8-
கனவில் சஞ்சரித்தது போதுமென்று
நிஜத்தை நோக்கி பயணமானேன்
புத்துணர்வுடன் துவங்கியது
புது வாழ்க்கை
அங்கே
பொய் முகங்கள் இல்லை
லஞ்ச லாவண்யம் இல்லை
ஏமாற்று அரசியல்வாதிகள் இல்லை
ஈவ்டீசிங் தூண்டுதலுக்கான
அரைகுறை ஆடையணிந்த
மங்கையர் இல்லை
மதபேதங்கள் இல்லை
ஜாதிகள் இல்லை
சந்தோஷம் மட்டும்
எங்கும் நிறைந்திருந்தது
அந்த சந்தோஷவெளியில்
இனிய சங்கீதமான உன்னுடன்
சொர்க்கத்தை
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்
...................
அய்யகோ..........
இதுவும் கனவுலகா?
மீண்டும் முயல்கிறேன்
நிஜத்தை நோக்கி......

-9-
புன்னகைக்கு நீ
தேசம்
புன்னகைக்கு நீ
அரசி
புன்னகைக்கு நீ
சிகரம்
புன்னகைக்கும்
சிற்பம் நீ
புன்னகைக்கும்
ஓவியம் நீ
புன்னகைக்கும்
மலர் நீ
புன்னகைக்க வைக்கும்
மணம் நீ
புன்னகைக்கு
மென்பொருள் நீ
மொத்தத்தில் புன்னகைக்கு
மெய்ப்பொருள் நீ
ஆனால் உன்னில்
பொய்யாகி போனது
நான்

Sweet are the words of Love, sweeter his thoughts:Sweetest of all what Love nor says nor thinks.
 


 

உயிரே...!

என்னை மட்டும் அல்ல-நீ
உன்னையும் சேர்த்து தான்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்...
என்னைக் காதலிக்கவில்லை
என்று சொல்லுவதால்...

அன்பே...!

குழந்தை முகமடா உனக்கு
அதை நம்பினேன் நான்
எப்படி முடிந்தது
என்னை ஏமாற்ற...?

உயிரே.....!

என் மனதிற்கு
என் மீது கோபமாம்.....
என்னை நினைப்பதை விடுத்து
உன்னையே நிதமும் நான் நினைப்பதால்......

நீ...!

நினைவில்
தீயாய் நீ...
உருகுகிறேன் நான்
மெழுகாய்....!

அன்பே...!

நுரைப் புன்னகையைக்
கரையிடம் தொலைத்த அலைபோல்
உன்னிடம் என் இதயத்தைத்
தொலைத்து விட்டேனடா நான்.....

யாரின் தவறு...?

உன்னைப் பார்த்தது
என் கண்களின் தவறா...?

உன்னிடம் மயங்கியது
என் இதயத்தின் தவறா...?

உன்னையே நினைத்தது
என் மூளையின் தவறா...?

உன் சிரிப்பில் என்னைத் தொலைத்தது
என் மனதின் தவறா...?

உன்னைக் காதலித்தது
என் இதயத்தின் தவறா...?

உன்னிடம் என் மனதை சொன்னது
என் இதழ்களின் தவறா...?

நீ மறுத்தது
விதியின் தவறா...?

நாம் பிரிந்தது
காலத்தின் தவறா...?

உனக்காக கண்ணீர் சிந்துவது
என் கண்களின் தவறா...?

காதலனே...!

வாழ்வில் முதல் முறை
உன்னக்காக
என் கண்ணீர் சுரப்பிகள்
தங்கள் வேலையைச்
சரியாகச் செய்கின்றன!!!

கண்ணா....!

உன் நினைவால்
வரும் போது
கண்ணீர் கூட
தித்திக்கிறது!

என் அன்பே....!

உயிரோடு
இறந்து விட்டேன் நான்
நீ "மறந்துவிடு" என்று
சொன்ன வார்த்தையால்......

நீ....!

என் கவிதையின்
முதல் வரி நீ...
என் கண்ணீரின்
முதல்த் துளி நீ...
என் வாழ்வின்
முதல் அர்த்தம் நீ...
என் உயிரின்
முதல்த் துடிப்பு நீ...

Love & Friendship

காதல்
கண்ணீரை
வர வைக்கும்
இனிய உணர்வு...

நட்பு
வரும் கண்ணீரைத்
துடைக்கும்
அழகிய உறவு....

நட்பு

காரணம் இல்லாமல் கலைந்து போக
இது கனவும் இல்லை.....
காரணம் சொல்லி பிரிந்துபோக
அது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை இருக்கும்
நமது நட்பு அது

நீ...!

காலைப் பனியின்
துளிகளில் நீ...
மாலைச் சூரியனின்
கதிர்களில் நீ...
கடலில் கலக்கும்
வானத்தில் நீ...
கண்ணிலிருந்து பிரியும்
கண்ணீரில் நீ...
உயிரை எடுக்கும்
விஷத்தில் நீ...
உயிர் கொடுக்கும்
அமுதத்தில் நீ...
இதயத்தில் எழும்
இசையில் நீ...
காதில் கேட்கும்
பாடலில் நீ...

அன்பே...!

குழந்தை முகமடா உனக்கு
அதை நம்பினேன் நான்
எப்படி முடிந்தது
என்னை ஏமாற்ற...?

மாலை நேர தாஜ்மஹால்......!

ரத்தக் குளியல்
நடத்துகிறது தாஜ்மஹால்.......
மாலைச் சூரியனின்
கதிர் கொண்டு.......

உயிரே.....!

என் மனதிற்கு
என் மீது கோபமாம்.....
என்னை நினைப்பதை விடுத்து
உன்னையே நிதமும் நான் நினைப்பதால்......

நட்பு

காரணம் இல்லாமல் கலைந்து போக
இது கனவும் இல்லை.....
காரணம் சொல்லி பிரிந்துபோக
அது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை இருக்கும்
நமது நட்பு அது

மாலை நேர தாஜ்மஹால்......!

ரத்தக் குளியல்
நடத்துகிறது தாஜ்மஹால்.......
மாலைச் சூரியனின்
கதிர் கொண்டு.......

இரும்பும் பேசுமா????

உயிரை பிழியும்
உந்தன் நினைவு
உனக்கு தெரியுமா?

ஊமை ஆனேன்
உன்னால் தானே
உணர முடியுமா?

இருக்கும் வரைக்கும்
இல்லை என்று
சொல்ல விருப்பமா?

இழந்து விட்டால்
திருப்பி பெற
இதயம் கிடைக்குமா??

இங்கே இன்பம்
இருக்குமா சொல்
இரும்பும் பேசுமா????


ஆணே...

அழகிய ஐஸ்வர்ரியாவுடன் தான் வாழபிடிக்கும்....
இரவானால்....
அனைப்பவள் அனைவரும் ஐஸ்வரியா என்று நினைக்கவும் தெரியும்....
பெண்ணை பேயாக நினைக்கும் உனக்கு-என்று
பாசம் தெரியும்....
உன்னை பெற்றவளும் பெண் என்று
சொல்லியா தெரியும்...
உன் அன்பு உண்மை என்றால்..???
உன் காதல் ஜெயிக்கும்...!!!
நீ அன்பு செய்...!!!
அதன் சக்தியை பொறுத்திருந்து பார்...
நீ ஜெயிக்கும் நேரம் வரும்....


பல்லாண்டு வாழ்கவே !

வாழ்க வாழ்க வாழ்கவே
பல்லாண்டு வாழ்கவே
பூமியில் நீங்கள் வாழ்கவே
புதுமண தம்பதிகள் வாழ்கவே

புதியதோர் உறவினில்
புறப்படும் போதினில்
புரிந்து நீங்கள் வாழ்கவே
பூத்தூவினோம் வாழ்கவே

இதயங்கள் இணைந்தது
இறைவனின் முன்னிலையில்
இறுதிவரை வாழ்கவே
இன்பமாய் நீங்கள் வாழ்கவே

மனமென்னும் சோலையில்
மல்லிகை பூக்களாய்
மணம் வீசி மகிழவே
மனதார நீங்கள் வாழ்கவே

பிள்ளைகள் பெற்று நீங்கள்
பெருமைகள் பேசவே
பேரின்பம் நீங்கள் கண்டு
பெயர் சொல்ல நீங்கள் வாழ்கவே


Eppadi solluvaen Doctor'ridam?
En idhayathil irukkum ottai'kku karanam,
en kadhali endru?

Kaathirupadhu aanukku alagu,
Kaakka vaipadhu pennukku alagu.

.....unnai kandadhum kadhal konden naane,
Kanne'thirae thondriyadhalae tholaindavan naanthaane.

Kanngall Asaiya Villai,
Udhadugal Pesavillai,
Idhayam Mattum
Valiyaal Thudikkiradhu. . .
Unnai Kaanaamal. . .

காதல் வருமா?

காலம் காத்திருந்தால், என்றாவது வசந்தம் வரும்
பாலைவனம் திரிந்தால், எங்காவது சோலை வரும்
கற்பனை செய்தால், எப்போதாவது கவிதை வரும்
நான் என்ன செய்தும், உன் காதல் வரவில்லையே

 
 
   
Anzahl... 7213 Besucher (23828 Hits)
Diese Webseite wurde kostenlos mit Homepage-Baukasten.de erstellt. Willst du auch eine eigene Webseite?
Gratis anmelden